இலங்கை
சமூக வலைத்தளங்களில் போலி தகவல்கள்: புதிய சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்


சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள் பகிரப்படுவதைத் தடுப்பதற்காக புதிய சட்டங்களை உருவாக்குவதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
போலியான தகவல்கள் பகிரப்படுவதைத் தடுப்பதற்காக புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என நீதி அமைச்சர் அலி சப்ரி நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



