இலங்கை

இலங்கையில் திருமதி அழகு ராணி போட்டியில் ஏற்பட்ட பதட்டமான நிலைமை

இலங்கையில் திருமணமான அழகு ராணி தெரிவிற்கான இறுதிப் போட்டி நேற்று மாலை நெளும் பொகுன அரங்கில் நடைபெற்றுள்ளது.

இதன்போது போட்டியாளரான திருமதி புஷ்பிகா டி சில்வா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

வெற்றியாளருக்கு ஷிராந்தி ராஜபக்ஷ, ரோஸி சேனாநாயக்க மற்றும் சந்திமல் ஜெயசிங்க ஆகியோர் கிரீடத்தை சூட்டியுள்ளனர்.

இருப்பினும் ஒரு சில நிமிடங்களில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட புஷ்பிகா டி சில்வா விவாகரத்து பெற்றவர் எனவும், எனவே அவர் இந்த போட்டியின் வெற்றியாளராவதற்கு தகுதியற்றவர் எனவும் திருமணமான உலக அழகியான கரோலின் ஜுரி மேடையில் அறிவித்துள்ளார்.

இதனையடுத்து ஏற்கனவே இரண்டாமிடத்தை பெற்றுக் கொண்டதாக அறிவிக்கப்பட்டவர் திருமணமான அழகு ராணியாக அறிவிக்கப்பட்டதுடன், புஷ்பிகா டி சில்வாவிடமிருந்து கிரீடம் அகற்றப்பட்டு குறித்த பெண்ணுக்கு அணிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நிகழ்வு முடியும் வேளையில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker