இலங்கை

தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1000 ரூபாயாக அதிகரிப்பு!

பல வருடங்களாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் கோரிய நாளொன்றுக்கான அடிப்படை சம்பளமான 1000 ரூபாயை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் சம்பள நிர்ணய சபையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படை சம்பளத்தை 900 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மேலதிக கொடுப்பனவாக 100 ரூபாயினை பெற்றுக் கொடுக்க சம்பள நிர்ணய சபை அனுமதி வழங்கியுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் தோட்ட முதலாளிமார் சம்மேளத்தின் சார்பில் 08 பேரும், தோட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் 08 பேரும், அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 03 பேரும் கலந்துக்கொண்டிருந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker