இலங்கை

கிழக்கில் புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்

கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, கிழக்கு மகாணத்தில் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 323 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் 264 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 173 பேரும், அம்பாறை பிராந்தியத்தில் 34 பேரும், கல்முனை பிராந்தியத்தில் 852 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களில் 539 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன், 802 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதுவரையான காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் 7 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker