இலங்கை
கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபை உறுப்பினர்களுக்கும், மாவைக்கும் இடையில் சந்திப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபை உறுப்பினர்களுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையிலான சந்திப்பு இன்றையதினம்(வியாழக்கிழமை) இடம்பெற்றது.
குறித்த சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றிருந்தது.
இந்த சந்திப்பில் வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஜானமும் கலந்து கொண்டிருந்தார்.