இலங்கை

கொரோனாவில் இருந்து மேலும் 489 பேர் பூரணமாகக் குணமடைந்தனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 489 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் இதுவரை 23 ஆயிரத்து 793 பேர் கொரோனா தொற்றில் இருந்து பூரணமாகக் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

இலங்கையில் இதுவரையில் 32 ஆயிரத்து 135 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 23 ஆயிரத்து 793 பேர் குணமடைந்துள்ள நிலையில், 8 ஆயிரத்து 193 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளான 149 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker