உலகம்

ஈரானிய ஊடகவியலாளர் தூக்கிலிடப்பட்டார்: பிரான்ஸ்- மனித உரிமைக் குழுக்கள் கண்டனம்!

2017ஆம ஆண்டு அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களின் போது வன்முறையைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்ட ஈரானிய ஊடகவியலாளர் ருஹொல்லா சேம் தூக்கிலிடப்பட்டார் என்று ஈரானின் அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது

பல ஆண்டுகளாக நாடுகடத்தப்பட்ட பின்னர் 2019ஆம் ஆண்டில் சிறைபிடிக்கப்பட்ட சேமின் மரண தண்டனையை ஈரானின் உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.

ஈரானிய உச்ச நீதிமன்றம் அவருக்கு எதிரான மரண தண்டனையை உறுதிசெய்த நான்கு நாட்களுக்கு பின்னர் அவர் இன்று (சனிக்கிழமை) தூக்கிலிடப்பட்டார்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பிரான்ஸ், மனித உரிமைக் குழுக்கள் மற்றும் எல்லைகள் இல்லாத நிருபர்கள் (ஆர்.எஸ்.எஃப்) கடுமையாக எதிர்த்துள்ளன.

சீர்திருத்த சார்பு ஷியைட் மதகுருவின் மகன் சேம் ஈரானை விட்டு வெளியேறி பிரான்சில் தஞ்சம் புகுந்தார். பின்னர் 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஈரானின் புரட்சிகர காவல்படையினரால் கைது செய்யப்பட்டார்.

சேமின் வலைத்தளமும் பிரபலமான செய்தியிடல் பயன்பாடான டெலிகிராமில் அவர் உருவாக்கிய ஒரு அசைவரிசையிலும் ஈரானின் அரசாங்கத்திற்கு நேரடியாக சவால் விடுத்த அதிகாரிகளின் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சங்கடமான தகவல்களை பரப்பியது. அவரது அமட் செய்தி ஊட்டத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் இருந்தனர்.

வன்முறையைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டதற்காக சேமின் அமட்நியூஸ் ஊட்டம் 2018இல் செய்தி சேவை டெலிகிராமால் இடைநிறுத்தப்பட்டது. ஆனால் பின்னர் மீண்டும் மற்றொரு பெயரில் தோன்றியது.

சொத்துக்களை அழிப்பதில் கட்சி, நாட்டின் பொருளாதார அமைப்பில் தலையிடுதல், அமெரிக்க அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவது, பிரான்ஸ் உளவுத்துறைக்காக உளவு பார்ப்பது, பிராந்தியத்தில் ஒரு நாட்டின் உளவுத்துறை சேவைக்காக உளவு பார்ப்பது ஆகிய குற்றச்சாட்டுகளும் சோம் மீது முன்வைக்கப்பட்டன.

பொருளாதாரக் கஷ்டங்கள் குறித்த பிராந்திய எதிர்ப்புக்கள் நாடு தழுவிய அளவில் பரவியுள்ள நிலையில், 2017ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கிய அமைதியின்மையைத் தூண்டுவதற்காக அமெரிக்கா மற்றும் தெஹ்ரானின் பிராந்திய போட்டியாளரான சவுதி அரேபியா மற்றும் நாடுகடத்தப்பட்டிருக்கும் அரசாங்க எதிரிகள் மீது ஈரானிய அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

2017ஆம் ஆண்டு அமைதியின்மையின் போது 21பேர் கொல்லப்பட்டதாகவும், ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த அமைதியின்மை ஈரான் பல தசாப்தங்களாக கண்ட மிக மோசமான ஒன்றாகும், மேலும் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக கடந்த ஆண்டு கொடிய போராட்டங்களும் நடந்தன.

2017ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கிய அந்த ஆர்ப்பாட்டங்கள், 2009 பசுமை இயக்க எதிர்ப்புக்களுக்குப் பின்னர் ஈரானுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தன. கடந்த ஆண்டு நவம்பரில் இதேபோன்ற வெகுஜன அமைதியின்மைக்கு களம் அமைத்தன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker