இலங்கை

அடுத்த பிறந்தநாளைக் கோட்டையில் கொண்டாடுவோம்: கமல் அதிரடி

மக்கள் நீதி மையத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் “அடுத்த பிறந்தநாளை கோட்டையில் கொண்டாடுவோம்” என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கமல்ஹாசன் நேரு தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய நிலையில்,சமூக வலைத்தளங்களிலிலும் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் பலர் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தனக்கு வாக்களித்த அத்தனை தெரிவித்து தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், என்னுடைய பிறந்தநாளுக்கு நேரிலும், தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் வாழ்த்திய ரசிகர்கள், நண்பர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலகினர், பிற துறை ஆளுமைகள், ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் பிறந்த நாளை ‘நற்பணி’ தினமாகக் கொண்டாடிய எங்கள் மக்கள் நீதி மய்யத்தின் சகோதரர்களை மனதாரத் தழுவிக்கொள்கிறேன்.

உங்கள் அன்பிற்கு மென்மேலும் தகுதியுடையவனாக என்னை ஆக்கிக்கொள்ள ‘உள்ளும் புறமும்’ சீரமைப்பேன்.

அடுத்த பிறந்தநாளைக் கோட்டையில் கொண்டாடுவோம். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker