இலங்கை

துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் ரூபா 50000 ரூபா பெறுமதியான பிணையில் விடுதலை

வி.சுகிர்தகுமார்  

  திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் ரூபா 50000 ரூபா  பெறுமதியான பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

குறித்த சந்தேக நபர்களை அக்கரைப்பற்று  நீதிமன்றில் திருக்கோவில் பொலிசார் நேற்றைய தினம் (30) அக்கரைப்பற்று பதில் நீதிபதி இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

குறிப்பிட்ட சந்தேக நபர்கள் தாம் செய்ய குற்றத்தினை ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்தததை அடுத்து  நீதிமன்றினால் எச்சரிக்கப்பட்டு, தலா ரூபா 50000 ரூபா  பெறுமதியாக பிணையில் செல்ல இவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

திருக்கோவில் பொலிசார் 10 துப்பாக்கிகளை கைப்பற்றியதுடன்  8 சந்தேக நபர்களையம் 28, 29 ஆம் திகதிகளில் கைது செய்தனர்

திருக்கோவில் பொலிஸ் நிலைய விசேட தகவல் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.ஜயவீர தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட அதிரடி தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த தேடுதல் நடவடிக்கையானது சாகாமம் கஞ்சிகுடியாறு சின்னத்தோட்டம் தமப்pலுவில் திருக்கோவில் விநாயகபுரம் மற்றும் மண்டானை ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன்போதே குறித்த 3 சொட்கண் உள்ளிட்ட உள்ளுர் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிசார் குறிப்பிட்டனர்.

மேலும் பயன்படுத்தக் கூடிய புதிய 6 ரவைகளும் பயன்படுத்திய 11 வெற்று ரவைகளும் ரவைகளுக்கு பயன்படுத்தும் வெடி பொருட்களும் கைப்பற்றப்பட்டதாகவும் கூறினர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker