இலங்கை

இலங்கையில் கொரோனா பாதிப்பு 10,000ஐ நெருங்கியது!

நாட்டில் மேலும் 168 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 53 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்கள் எனவும் ஏனைய 115 பேரும் பேலியகொடவில் தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று மட்டும் இதுவரை 582 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணியில் தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஆறாயிரத்து 313 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கை பத்தாயிரத்தை நெருங்கியுள்ளதுடன் இதுவரையான பாதிப்பு ஒன்பதாயிரத்து 787 ஆகப் பதிவாகியுள்ளது.

மேலும், நாட்டில் தொற்று கண்டறியப்பட்டோரில் இதுவரை நான்காயிரத்து 142 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ள நிலையில் இன்னும் ஐயாயிரத்து 626 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

நாட்டில் இதுவரை 19 பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker