உலகம்

நாளொன்றில் அடையாளம் காணப்பட்ட அதிகபட்ச கொவிட்-19 பாதிப்பு: உலக சுகாதார அமைப்பு

நாளொன்றில் அடையாளம் காணப்பட்ட அதிகபட்ச கொரோனா வைரஸ் (கொவிட்-19) பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாத்திரம் புதிதாக மூன்று இலட்சத்து 7,930பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இறுதியாக செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி மூன்று இலட்சத்து 6,857பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்டதற்கு பின்னர், நேற்றைய நாளிலேயே அதிகமான பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரேஸில் ஆகிய நாடுகளில் நாளாந்தம் அதிகளவில் புதிய தொற்றாளர்கள் இனங்காணப்படுவதாகவும் உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், அமெரிக்காவில் புதிய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நூற்றுக்கு 44 சதவீதத்தினால் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உலகளவில் 28 மில்லியனுக்கும் அதிகமான தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன, அவற்றில் பாதி அமெரிக்காவில் உள்ளன.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் இரண்டு கோடியே 91இலட்சத்து 85ஆயிரத்து 779பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker