ஆலையடிவேம்பு

அருள்மிகு கோளாவில் ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலய வருடாந்த மகோன்னத மகோற்சவ பெருவிழாவின் பாரம்பரிய கலை கலாசார நடன ஊர்வலத்துடன் கோலாகலமாக இடம்பெற்ற 7ம் நாள் திருவிழா……

அருள்மிகு கோளாவில் ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலய வருடாந்த மகோன்னத மகோற்சவ பெருவிழா கோலாகலமாக இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் அருள்மிகு கோளாவில் ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலய வருடாந்த மகோன்னத மகோற்சவ பெருவிழாவின் 07ம் நாள் திருவிழாவான பாரம்பரிய கலை கலாசார நடன ஊர்வலங்கள் என்பனவற்றுடன் கோலாகலமாக நேற்று (28) பக்தி பூர்வமாக பெரும் திரளான பக்த அடியார்கள் சூழ சிறந்த முறையில் இடம்பெற்றது.

கோளாவில் ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலய விநாயகப்பெருமானின் இவ்வருட மகோற்சவம் கடந்த 22ஆம் இடம்பெற்ற கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

தொடர்ந்து இடம்பெற்ற கிரியைகளுடன் 31ஆம் திகதி இடம்பெறும் தீர்த்தோற்சவம் அன்று மாலை நடைபெறும் கொடியிறக்கல் திருவிழாவுடனும் 01ஆம் திகதி இடம்பெறும் பூங்காவனத்திருவிழா என்பவற்றுடன் ஆலய வருடாந்த மகோன்னத மகோற்சவ பெருவிழா இனிதே நிறைவுறயிருக்கின்றது.

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker