பொத்துவில் பிரதேச ஊரணி கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட கனகர் கிராம அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் மற்றும் அப்பியாசக்கொப்பிகள், புத்தகங்கள் வழங்கி வைப்பு…..

பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஊரணி கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட கனகர் எனும் பகுதியில் உள்ள அறநெறி மற்றும் கல்விச் செயற்பாடுகளை அர்ப்பணிப்புடன் இலவசமாக 125 மாணவர்களுக்கு வழங்கிவரும் கனகர் கிராம அறநெறி பாடசாலையை சேர்ந்த எட்டு ஆசிரியர்களுக்கு அன்னை சிவகாமி அறக்கட்டளையின் ஸ்தாபகர் மகாரூபன் அவர்களின் நிதி அனுசரனையில் ரூபா 3000 வீதம் எட்டு ஆசிரியர்களுக்கும், உலர் உணவுப் பொருட்களும் மற்றும் மாணவர்களுக்கு அப்பியாசக் தொப்பிகள் மற்றும் புத்தகங்களை பொத்துவில் பிரதேச செயலக செயலாளர் R.திரவியராஜ் தலைமையில் வழங்கிவைக்கப்பட்டன.
இன்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் T.கஜேந்திரன் திருக்கோவில் பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் k.சதிசேகரன் மற்றும் சிரேஷ்ர ஊடகவியலாளரும் சமூக சேவையாளருமான சகாதேவராஜா மற்றும் அமைப்பின் இனைப்பாளர் சோ.வினோஜ்குமார்மற்றும் திருக்கோவில் பிரதேச செயலக உத்தியோத்தர்கள் ஆகியோர் இணைந்து இந்த மாதாந்த உதவித்தொகை மற்றும் நிவாரணப்பொதிகளையும் அப்பகுதிவாழ் மக்களிடம் கையளித்தனர்.