இலங்கை

சிரேஸ்ட ஊடகவியலாளர் சிவம் பாக்கியநாதன் மட்டக்களப்பு மேயராக தெரிவு – குவியும் பாராட்டுக்கள்

மட்டக்களப்பு மாநகர சபையில் 16 ஆசனங்களை வென்றுள்ள இலங்கை தமிழரசுக் கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் 2 ஆசனங்களுடன் ஆட்சியமைத்துள்ளது.

கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளார் A.L.M அஸ்மி, மாநகர சபை ஆணையாளர், நா.தனஞ்சயன் ஆகியோரின் தலைமையில் மாநகர சபை கேட்போர் கூடத்தில் மேயர் தெரிவு இடம்பெற்றது.

34 ஆசனங்களை கொண்டுள்ள மட்டக்களப்பு மாநகர சபையின் 8ஆவது மேயராக இலங்கை தமிழரசுக் கட்சியில் போட்டியிட்ட சிரேஸ்ட ஊடகவியலாளரான சிவம் பாக்கியநாதன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

அத்துடன் இலங்கை தமிழரசு கட்சியை சேர்ந்த வைரமுத்து தினேஷ்குமார் மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி மேயராக தெரிவு செய்யப்பட்டார்.

மட்டக்களப்பு மாநகர சபைக்கான தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி 16 ஆசனங்களை வென்றது.

தேசிய மக்கள் சக்தி 9 ஆசனங்களையும் சுயேச்சைக்குழு 4 ஆசனங்களையும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 3 ஆசனங்களையும்  ஐக்கிய மக்கள் சக்தி 2 ஆசனங்களை கைப்பற்றின.

மட்டக்களப்பு மாநகர சபையில் 16 ஆசனங்களை பெற்றுள்ள இலங்கை தமிழரசுக் கட்சி ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து 18 ஆசனங்களுடன் ஆட்சியமைத்துள்ளது.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker