இலங்கை

பருத்தித்துறை நகர சபையின் வரவு செலவு திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டுள்ளது!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நகரசபையின் வரவு செலவுத் திட்டத்திற்கான விசேட கூட்டம் இன்றையதினம் நகரசபை தலைவர் யோ.இருதயராசா தலைமையில்  இடம்பெற்றிருந்தது.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக இலங்கைத் தமிழரசு கட்சியின் 5 உறுப்பினர்களும், தமிழர் விடுதலை கூட்டணியின் ஒரு உறுப்பினரும், சுயேட்சை குழுவின் ஒரு உறுப்பினருமாக மொத்தமாக ஏழு உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் 6 உறுப்பினர்கள்  வாக்களித்துள்ளனர்.

அத்தோடு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் இன்றைய சபை அமர்வில் கலந்துகொண்டிருக்கவில்லை.

இதன் காரணமாக பருத்தித்துறை நகரசபையின்  2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஒரு மேலதிக வாக்கல் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் உறுப்பினர்களின் வாக்குகளின் அடிப்படையில் தோற்கடிக்கப்பட்டிருந்த போதும் தலைவரின் அதிகாரத்தால் நிறைவேற்றப்பட்டிருந்தது.

பருத்தித்துறை நகர சபையின் தலைவர் பதவியை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker