ஆலையடிவேம்பு
241 காலாட்படையினர் ஏற்பாட்டில் வாச்சிக்குடா பகுதி 100 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணம்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட வாச்சிக்குடா பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு இன்றைய தினம் (04) காலை 10.00 மணியளவில் 241 காலாட்படையினர் ஏற்பாட்டில் உலர் உணவுப்பொதிகள் ஆலையடிவேம்பு கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் வழங்கிவைக்கப்பட்டது.
மேஜர் ஜெனரல் 24 ஆவது காலாட்படை பிரிவின் மூத்த அதிகாரி விஜயநாத் ஜயவீர USP PSC மற்றும் மேஜர் ஜெனரல் 24 ஆவது காலாட்படை பிரிவின் துணை அதிகாரி NSS டயஸ் RSP என்பவர்களின் வேண்டுதலின் பேரில் Wealth Trust Security Ltd நிறுவனத்தின் அனுசரணையுடன் குறித்த உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டது.
குறித்த செயற்படுகளுக்கான ஏற்பாட்டினை 241 காலாட்படை பிரிவின் பிரிகேட் கமெண்டர் சுகத் திசாநாயக்க, Army Camp நீத்தை Commonding Officer Major. அசேல பாண்டரா ஆகியவர்கள் மேற்கொண்டிருந்தனார்.



