இலங்கை
இலங்கை மத்திய வங்கியின் 16ஆவது ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் பொறுப்பேற்பு

இலங்கை மத்திய வங்கியின் 16ஆவது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ரால் சற்றுமுன்னர் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
இன்று (15) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து, அவர் தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.
பிரசித்திபெற்ற பட்டயக் கணக்காளரான அஜித் நிவாட் கப்ரால் இதற்கு முன்னர் அமைச்சின் செயலாளராகவும் சுமார் 9 மாதக் காலப்பகுதி வரையில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.