இலங்கை

நாட­ளாவிய ரீதியில் கடும் மழை: 5 பேர் பலி; 7 மாவட்­டங்­க­ளுக்கு சிவப்பு எச்­ச­ரிக்கை

நாட­ளா­விய ரீதியில்   கடந்த ஒரு வார­மாக நிலவும் சீரற்ற கால­நி­லையால் ஐவர் உயி­ரி­ழந்­துள்­ள­தோடு 573 குடும்­பங்­களைச் சேர்ந்த 2272 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இந்த சீரற்ற கால­நிலை எதிர்­ வரும் சில தினங்­க­ளு க்கு தொடரும் என்றும் சில பிர­தே­சங்­களில் 150 மில்லி மீற்­றரை விட அதிக மழை வீழ்ச்சி பதி­வாகக் கூடும் என்றும் இலங்கை வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. அதிக மழை வீழ்ச்சி பதி­வாகக் கூடும் எனத் தெரி­வித்து 8 மாவட்­டங்­க­ளுக்கு சிவப்பு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

கால­நிலை

மழை­யு­ட­னான கால­நிலை எதிர்­வரும் ஓரிரு தினங்­க­ளுக்கு நீடிக்கும் என்று இலங்கை வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் எதிர்வு கூறி­யி­ருக்­கி­றது. அத்­தோடு 8 மாவட்­டங்­க­ளுக்கு சிவப்பு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­க­ளிலும் ஏனைய சில பிர­தே­சங்­க­ளிலும் அதிக மழை பெய்யக் கூடும் என்றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

வடக்கு மற்று;ம கிழக்கு மாகா­ணங்­க­ளிலும், பொலன்­ன­றுவை மாவட்­டத்­திலும் 150 மில்லி மீற்­றரை அண்­மித்த மழை வீழ்ச்சி பதி­வாகக் கூடும். ஊவா, சப்­ர­க­முவ, மத்­திய மாகா­ணங்­க­ளிலும் , அநு­ரா­த­புரம் மற்றும் அம்­பாந்­தோட்டை ஆகிய மாவட்­டங்­க­ளிலும் 100 மில்லி மீற்றர் வரை மழை வீழ்ச்சி பதி­வாகக் கூடும்.

அத்­தோடு மத்­திய, வடக்கு, வட­மத்­திய, வடமேல் மற்றும் தென் மாகா­ணங்­க­ளிலும் , திரு­கோ­ண­மலை மாவட்­டத்­திலும் மழை­யு­ட­னான கால­நிலை நிலவும் போது காற்றின் வேகம் மணித்­தி­யா­லத்­துக்கு 40 – 50 கிலோ மீற்றர் வரை அதி­க­ரிக்க கூடும் என்றும் வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் எதிர்வு கூறி­யி­ருக்­கி­றது.

எனவே அடை மழை மற்றும் காற்­றினால் ஏற்­படக் கூடிய பாதிப்­புக்­களில் இருந்து பாது­காத்துக் கொள்­வ­தற்­காக மக்கள் அவ­தா­னத்­துடன் இருக்க வேண்டும் என்று அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளனர்.

 

சிவப்பு எச்­ச­ரிக்கை 

150 மில்லி மீற்­றரை விட அதிக மழை வீழ்ச்சி பதி­வாகக் கூடும் எனத் தெரி­வித்து 8 மாவட்­டங்­க­ளுக்கு சிவப்பு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, வவு­னியா, மன்னார், திரு­கோ­ண­மலை, பொலன்­ன­றுவை, மட்­டக்­க­ளப்பு  மற்றும் அம்­பாறை ஆகிய மாவட்­டங்­க­ளுக்கே இவ்­வாறு சிவப்பு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

அதி கூடிய மழை­வீழ்ச்சி

கடந்த 24 மணித்­தி­யா­லங்­களில் யாழ்ப்­பாணம் மாவட்­டத்தின் ஒட்­டுச்­சுட்டான் பிர­தே­சத்தில் 158.2 மில்லி மீற்றர் அதி கூடிய மழை வீழ்ச்சி பதி­வா­கி­யுள்­ளது.

பாதிப்பு

கடந்த 18 ஆம் திகதி முதல் நாட்டில் நிலவும் சீரற்ற கால­நி­லையால் 7 மாவட்­டங்­களில் 573 குடும்­பங்­களைச் சேர்ந்த 2272 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தோடு ஐவர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது.

அத்­தோடு கடும் காற்று மற்றும் வெள்ளம் என்­ப­வற்­றினால் ஒரு குடி­யி­ருப்பு முழு­மை­யா­கவும், 38 வீடுகள் பகு­தி­ய­ள­விலும், ஏனைய கட்­டங்கள் மூன்று பகு­தி­ய­ள­வி­லும்­சே­த­ம­டைந்­துள்­ளன. அனர்த்­தங்­களால் பாதிக்­கப்­பட்ட 61 குடும்­பங்­களைச் சேர்ந்த 203 பேர் தற்­கா­லிக முகாம் ஒன்றில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

புத்­தளம்

புத்­தளம் மாவட்­டத்தில் சிலாபம், மஹா­வெவ, பள்­ளம, முந்­தளம்,  மற்றும் ஆண­மடு ஆகிய பிர­தேச செய­ல­கங்­க­ளுக்கு உட்­பட்ட பிர­தே­சங்­களில் 549 குடும்­பங்­களைச் சேர்ந்த 2214 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தோடு, 11 குடி­யி­ருப்­புக்கள் பகு­தி­ளவில் சேத­ம­டைந்­துள்­ளன.

மொன­ரா­கலை

மொன­ரா­கலை மாவட்­டத்தில் பிபில பிர­தே­சத்தில் மண்­ச­ரி­வினால் 61 குடும்­பங்­களைச் சேர்ந்த 203 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இவ்­வாறு பாதிக்­கப்­பட்ட அனை­வரும் தற்­கா­லிக முகாம் ஒன்றில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

மட்­டக்­க­ளப்பு

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 14 குடும்­பங்­களைச் சேர்ந்த 49 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தோடு நால்வர் உயி­ரி­ழந்­துள்­ளனர். உயி­ரி­ழந்­த­வரில் ஒருவர் கோரளை ப்பற்று பிர­தே­சத்தில் பலத்த காற்­றி­னாலும், ஏனைய மூவரும் மன்­மு­னைப்­பற்று பிர­தே­சத்தில் நீரில் மூழ்­கியும் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

மன்னார்

மன்னார் மாவட்­டத்தில் மன்னார் நக­ரத்தில் பலத்த மழையால் நீர் மட்டம் அதி­க­ரித்­த­மையால் ஆறொன்றில் பய­ணித்துக் கொண்­டி­ருந்த படகு விபத்­துக்­குள்­ளாகி ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த 6 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன் ஒருவர் உயி­ரி­ழந்­துள்ளார்.

முல்­லைத்­தீவு

முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் வெள்­ளத்­தினால் ஒருவர் பாதிக்­கப்­பட்­டுள்ளார்.

களுத்­துறை

களுத்­துறை மாவட்­டத்தில் மது­ர­வெல மற்றும் இங்­கி­ரிய பிர­தே­சங்­களில் கடும் காற்று , மின்னல் தாக்கம் என்­ப­வற்­றினால் 19 குடும்­பங்­களைச் சேர்ந்த 62 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தோடு ஒரு வீடு முழுமையாகவும், 18 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

அம்பாந்தோட்டை

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் கடுவான பிரதேசத்தில் கடும் காற்றினால் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, குடியிருப்பொன்றும் சேதமடைந்துள்ளது.

கேகாலை

கேகாலை மாவட்டத்தில் ருவன்வெல்ல மற்றும் ரம்புக்கன ஆகிய பிரதேசங்களில் 2 குடும்பங்களைச் சேர்ந்த எட்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு இரு குடியிருப்புக்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker