இலங்கை

14 நாட்களுக்கு நாடு முடக்கப்படாது என்கிறார் இராணுவத் தளபதி!

நாட்டினை 14 நாட்களுக்கு முடக்கவுள்ளதாக வெளியான செய்தியினை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா நிராகரித்துள்ளார்.

இதுபோன்ற எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜூன் 01ஆம் திகதி முதல் 14 நாட்களுக்கு நாடு முடக்கப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் தகவல்கள் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பரவும் தவறான கருத்துக்களை கண்டு மக்கள் ஏமாற்றமடையக் கூடாது எனவும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker