ஆலையடிவேம்பு

பனங்காடு அருள்நிறை மாதுமை உடனுறை ஸ்ரீ பாசுபதேசுவரர் தேவஸ்தான மகா கும்பாபிசேக பெரும்சாந்தி நிகழ்வின் மண்டலாபிஷேக 21 பூசை….

அபிராஜ் , தஸ்திகாந்

அம்பாரை மாவட்டத்தில் உள்ள பழம்பெரும் ஆலயங்களில் ஒன்றான அக்கரைப்பற்று பனங்காடு அருள்நிறை மாதுமை உடனுறை ஸ்ரீ பாசுபதேசுவரர் தேவஸ்தான புனராவர்த்தன நவகுண்ட பஷ அஷ்டபந்தன பிரதிஷ்டா மகா கும்பாபிசேக பெரும்சாந்தி குடமுழுக்கு பெருவிழா கடந்த மாதம் 28ஆம் திகதி காலை 6.00 மணி தொடக்கம் 7.20 மணிவரையுள்ள சுக்கிலபட்சத்து தசமி திதியும் மூல நட்சத்திரமும் அமிர்த சித்தயோகமும் கூடிய சுபமுகூர்த்த வேளையில் இறைவன் திருவருளால் இடம்பெற்றது.

கடந்த மாதம் 24 ஆம் திகதி அதிகாலை கருமாரம்ப கிரியைகளோடு ஆரம்பமான கும்பாபிசேக பெருவிழாவின் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வானது
25 ஆம் திகதி நண்பகல் 11.55 தொடக்கம் 26 ஆம் திகதி 4.00 மணிவரை இடம்பெற்றது.

தொடர்ந்து கிரியைகள் இடம்பெற்றதுடன் 28 ஆம் திகதி காலை 6.00 மணிமுதல் 7.20 மணிவரையுள்ள சுபமகூர்த்தத்தில் வேதோத்திர பாராயணங்கள் முழுங்க மாதுமை அம்பிகா சமேத ஸ்ரீ பாசுபதேசுவரருக்கும் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் குடமுழுக்கு இடம்பெற்று பெரும்சாந்தி விழா நடைபெற்றது.

அதனைத்தொடந்து 48 நாள் மண்டலாபிஷேக பூசைகள் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் நேற்றய தினம் (19) வெள்ளிக்கிழமை 21 நாள் பூசை நிகழ்வுகள் பல நூறு பக்கத்த அடியார்கள் சூழ இடம்பெற்றது மேலும் தொடந்தும் தினசரி பூசைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker