இலங்கை

விருந்தால் வினை: 4வது கர்ப்பிணி பெண் மரணம்!

கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் நான்காவது கர்ப்பிணிப் பெண் உயிரிழந்துள்ளார்

மாலபே, நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார். திஸ்ஸமஹாராம, யயகொடவில் வசிக்கும் 35 வயது பெண்ணே உயிரிழந்துள்ளார்.

தனது மூன்றாவது பிரசவத்திற்கு தயாராகும் போது அவர் உயிரிழந்துள்ளார். அவர் எட்டு மாத கர்ப்பமாக இருந்தார்.

மகரகமவில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்ட பின்னர், அந்தப் பெண்ணுக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டது. பின்னர் பரிசோதனையில் அவரது கணவருக்கும் வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது.

விருந்தில் கலந்து கொண்ட 17 பேருக்கு கோவிட் – 19 தொற்று இருப்பதுபரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker