இலங்கை

பயணக்கட்டுப்பாடுகள் நீடிப்பை வரவேற்பதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிப்பு

ஜூன் 14 அன்று பயண கட்டுப்பாடுகளை நீக்குவது நடைமுறைக்கு சாத்தியமாகாது!!

நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்க அரசாங்கம் எடுத்துள்ள முடிவை வரவேற்பதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அச்சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹண, போக்குவரத்து கட்டுப்பாடுகளை கடுமையாக அமுல்படுத்துவது அவசியம் என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும் பயணக் கட்டுப்பாடுகளின் போது அத்தியாவசிய உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களின் உடல்நலம் குறித்து அரசாங்கம் மேலதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker