இலங்கை

சீனாவின் அதிரடியால் மக்கள் வங்கிக்கு ஏற்பட்டுள்ள நிலை!!

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள பசளை தொகைக்கு பணத்தை கட்டாயம் செலுத்த நேரிடும் என மக்கள் வங்கியின் பொது முகாமையாளர் ரஞ்சித் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

9 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டியுள்ளது எனவும் அரச பசனை நிறுவனத்தின் குறைப்பாடுகளே இதற்கு காரணமாக அமைந்தது எனவும் யார் இதற்கான ஆலோசனைகளை வழங்கியது என்பது தெரியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

பசளை மாதிரியின் பரிசோதனை அறிக்கை கிடைக்கும் முன்னர் கடன் பத்திரம் வெளியிடப்பட்டுள்ளது எனவும் தற்போது செய்வதற்கு எதுவுமில்லை எனவும் கொடித்துவக்கு குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவு கிடைக்கவில்லை என்றால், ஏற்கனவே பணம் செலுத்தப்பட்டிருக்கும். நீதிமன்ற உத்தரவும் நீடித்து இருக்காது எனவும் அவர் கூறியுள்ளார். இந்த சம்பவத்தில் இலங்கை மத்திய வங்கி எந்த தவறையும் செய்யவில்லை எனவும் மக்கள் வங்கியின் பொது முகாமையாளர் மேலும் கூறியுள்ளார்.

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker