விளையாட்டு

ரி-20 உலகக்கிண்ணத் தொடர்: நெதர்லாந்து அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது இலங்கை அணி!

ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் குழு ஏ- 9ஆவது லீக் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி, 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் உலகக்கிண்ணத் தொடரின் பிரதான சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

ஜீலொங் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக குசல் மெண்டிஸ் 79 ஓட்டங்களையும் சரித் அசலங்க 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நெதர்லாந்து அணியின் பந்துவீச்சில், மீகெரென் மற்றும் லீட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் க்ளாசென் மற்றும் குக்டன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 163 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நெதர்லாந்து அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், இலங்கை கிரிக்கெட் அணி, 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஓடோவ்ட் ஆட்டமிழக்காது 71 ஓட்டங்களையும் ஸ்கொட் எட்வட்ஸ் 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், வனிந்து ஹசரங்க 3 விக்கெட்டுகளையும் மகேஷ் தீக்ஷன 2 விக்கெட்டுகளையும் லஹிரு குமார மற்றும் பினுர பெணார்டோ ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 44 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 5 பவுண்ரிகள் அடங்களாக 79 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட குசல் மெண்டிஸ் தெரிவுசெய்யப்பட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker