உலகம்

அவுஸ்திரேலியா செல்ல ஓர் அரிய சந்தர்ப்பம் ! மாணவர்கள் , தொழிலாளர்கள் நாட்டிற்குள் வர அனுமதி ! அறிவிப்பை வெளியிட்டார் அவுஸ்திரேலிய பிரதமர்

கல்வி கற்றல் மற்றும் தற்காலிக தொழில் வாய்ப்புக்களுக்கான எதிர்பார்ப்புடன் உள்ளவர்களுக்கு தமது நாட்டிற்குள் வர அனுமதி வழங்கப்படும் என அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.
தமது நாட்டிற்குள் வருகைத் தரும் எதிர்பார்ப்புடன் உள்ள மாணவர்கள் மற்றும் தற்காலிக தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளவர்களுக்காக வழங்கப்படும் விஸா கட்டணத்திற்கு விசேட சலுகை வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் வேகமாக பரவிவரும் ஒமிக்ரோன் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள தொழிலாளர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் வெளிநாட்டு மாணவர்களை தமது நாட்டிற்குள் வருகைத் தருவதை ஊக்குவிப்பதும் இந்த நடவடிக்கையின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker