இலங்கை

கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு புதிய உபவேந்தர் நியமனம்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் எச்.டி கருணாரத்ன இன்று (புதன்கிழமை) முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் முருத்தெட்டுவே ஆனந்த தேரரை ஜனாதிபதி முன்னர் நியமித்திருந்தார்.

அதன் பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் சிலர் தேரரிடம் இருந்து பட்டச் சான்றிதழைப் பெற மறுத்திருந்தனர். இந்த விடயம் பெரும் சர்ச்சையை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker