அம்பாறை நிந்தவூர் மடத்தடி மாட்டுப்பளை ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய பெளர்ணமி பூசை நிகழ்வு பெரும் சிறப்பாக இடம்பெற்றது….

ஜே.கே.யதுர்ஷன்
அம்பாறை நிந்தவூர் மடத்தடி மாட்டுப்பளை ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய பெளர்ணமி பூசை நிகழ்வு இன்றைய தினம் (17) பெரும் சிறப்பாக இடம்பெற்றது.
இவ் பெளர்ணமி பூசை நிகழ்வில் பெரும் தொகையான பக்தர்கள் கலந்து கொண்டதுடன் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வும் இடம்பெற்றதுடன்.
இவ் ஆலயத்தின் கும்பாபிஷேகமானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி இடம்பெற உள்ளநிலையில்.
பூஜை நிறைவுற்றதும் ஆலய தலைவர் கே.ஜெயசிறில் தலைமையில் இடம்பெற்ற பக்தர்களுடனான கலந்துரையாடலில் ஆலய நிர்மாண அலகரிப்பு மற்றும் கும்பாபிஷேகம் செய்வதற்கு நிதிபற்றாக்குறை நிலவிவருகின்ற நிலையில் பொதுக்கள், நலன் விரும்பிகள் தங்களால் இயன்ற நிதியினை ஆலயத்திற்கு வழங்கி ஆலய கட்டட நிர்மாணத்திற்கும் ஆலய அலங்கரிப்புக்கும் உதவுமாறு நிருவாகத்தினர் கேட்டுக்கொண்டு இருந்தனர்.
மேலும் இவ் கலந்துரையாடலில் ஆலய நிருவாகத்தினர் மேலும் உதவி கல்வி பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியவர்கள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.