கவிதைக்களம்

என் காதல் சுவாசம்

மறக்கவில்லை உன்னை
மறக்கவும் முடியவில்லை நீ தந்த நினைவுகளை
மறக்க நினைக்கும் பொது
நீ என்னோடு இருந்த நினைவுகளையே நினைக்கிறேன்
நீ என் அருகில் இருந்த நினைவுளை நினைக்கும்  போது
கண்களிலே  கண்ணீர் துளி கரைகிறதே

ஒன்றல்ல இரண்டல்ல
எத்தனை எத்தனை நினைவுகள் நீ தந்தது
அத்தைனையையும் எப்படி என் மனம் மறக்கும்
அதை மறக்க மறுக்கும்

மரணத்தை விட கொடுமையான வலிகளடி
மறக்க நினைக்கும் போது மனதில் ஏற்படும் வலிகள்

இரத்தத்தில் இரத்தமாகி
கண்களிலே கண்ணீராகி
காற்றலையில் நீ என்னில் சுவாசமாகி
உன் நினைவுகளை  கலக்க வைத்து விட்டாய் என்னிலே

என்னிலே கலந்த உன்னை
எப்படி மறக்கும் என் மனம்
மறப்பது என்பது உள்ளத்தின் மறு பிறவி
உள்ளம் மறு பிறவி எடுக்கவில்லை
உன்னை உல் மனம் மறப்பதும் இல்லை

இந்த உலகம் என்னை மறந்தாலும்
நான் இந்த உலகில் வாழும் அவரை
உன்னை மறக்காது என் மனம்

என் மரணமே
உன்னை என் மனம்  மறக்கும் மறு நொடியடி -அதுவரை
உன்னை மறக்காது உன்னை நேசித்த என் மனம்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker