இலங்கை

கூட்டமைப்பிற்கு தகுந்த பாடம் ஒன்றினை கற்பிக்க வேண்டும் – எஸ்.லோகநாதன்

மக்கள் இம்முறை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு தகுந்த பாடம் ஒன்றினை கற்பிக்க வேண்டும் என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் (வெள்ளிக்கிழமை) மாலை 3  மணியளவில்    இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் , ”வடக்கு கிழக்கு மாகாணத்தில் ஏதாவது பிரச்சினை ஏற்படுகின்ற போது  சம்பந்தனுக்கோ மாவை சேனாதிராஜாவிற்கோ தொலைபேசியில் தொடர்பினை நாம்  மேற்கொள்ளும் போது தாங்கள்  ஒரு கூட்டத்தில் இருப்பதாக கூறி இரவு வேளையில் தொடர்பு கொள்ளுமாறு கேட்பார்கள்.

ஆனால் இரவு வேளையில் தொலைபேசியினூடாக தொடர்பு கொள்ள முயற்சித்தால் தொடர்பை துண்டித்து விடுவார்கள்.செல்வம் அடைக்கலநாதனும் அப்படித்தான் எம்மை புறக்கணித்தார்.

அடுத்ததாக இவர்களுக்கு அனுப்பும் கடிதங்களுக்கு கூட பதிலளிப்பதில்லை.கூட்டம் கலந்துரையாடல் என மக்களின் பிரச்சினைகளுக்கு எவ்வித தீர்வுகளையும் காணாது இவர்களது செயற்பாடு அமைந்துள்ளது.

எங்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருடன் கதைக்க முடியாமல் இருப்பது சிரமமாக உள்ள நிலையில்  தமிழ் மக்களுக்கு எவ்வாறு இவர்களை சந்திப்பது என்ற கேள்வி எழுகின்றது.

தேர்தல் காலங்களில் மாத்திரம் வட கிழக்கு மக்களை ஏமாற்றி  அதை செய்ய போகின்றோம் இதை செய்யப்போகின்றொம் என கூறி இனப்பிரச்சினை தீர்ப்பது தொடர்பாக தொடர்ச்சியாக ஏமாற்றி வந்திருக்கின்றது. இன்று மக்கள் கண்ணீரும் கம்பலையுமாக இருக்கிறார்கள்.

ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்  நாடாளுமன்றம் சென்று சுகபோக வாழ்க்ககையை அனுபவித்து கொண்டு இருக்கின்றனர்.எனவே மக்கள் இம்முறை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு தகுந்த பாடம் ஒன்றினை கற்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.எம்மை ஏமாற்றி நடுறோட்டில் விட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினை தோற்கடிக்க வேண்டும். “ என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker