இலங்கை

மட்டக்களப்பில் ஏ.ரி.எம் அட்டையைத் திருடி மதுபானம் வாங்கிய நபருக்கு விளக்கமறியல்!

மட்டக்களப்பில் வைத்தியர் ஒருவரின் வங்கி ஏ.ரி.எம் அட்டையை திருடி 20,000 ரூபாவுக்கு மதுபானம் அருந்தியதாகக் கூறப்படும் 40 வயதுடைய ஒருவரை 14 நட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிவான் ஏ.சி.ஏ. றிஸ்வான் நேற்று (திங்கட்கிழமை) உத்தரவிட்டார்.

குறித்த வைத்தியரின் ஏ.ரி.எம் அட்டை காணாமல் போய்யுள்ள நிலையில், மதுபானக் கடை இரண்டில் 20,000 ரூபாவுக்கு மதுபானம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அவரின் வங்கிக் கணக்கில் பணம் கழிக்கப்பட்டு அவரின் கையடக்கத் தொலைபேசிக்கு வங்கியின் குறுந்தகவல் வந்துள்ளது

இதனையடுத்து பொலிஸாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து பொலிஸார் மதுபானக் கடைகளுக்குச் சென்று விசாரணை நடத்தியதில் மட்டக்களப்பு 2 ஆம் குறுக்கு வீதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவர், வைத்தியரின் ஏரிஎம். அட்டையை வழங்கி ஒரு கடையில் 10,000 ரூபாவுக்கு பியரும் இன்னொரு மதுபானக் கடையில் 10,000 ரூபாவுக்கு மதுபானத்தையும் கொள்வனவு செய்துள்ளமையும் தெரிய வந்ததனையடுத்து அவரை கடந்த ஞாயிற்றுக்கிழமை   பொலிஸார் கைது செய்தனர்

சந்தேக நபரை நேற்று திங்கட்கிழமை   மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் நீதவான் எ.சி.ஏ. றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker