Uncategorisedஆலையடிவேம்பு

மகாசக்தி நாவற்காடு பாலர் பாடசாலையில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் பொங்கல் விழா கொண்டாட்டமும்….

-ஹரிஷ், தனுசன்-

மகாசக்தி நாவற்காடு பாலர் பாடசாலையில் 2024ம் ஆண்டிற்கான உழவர் திருநாளை சிறப்பிக்கும் பொங்கல் விழா மற்றும் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் இன்று (13) காலை 10.00 மணியளவில் மிக சிறப்பாக நடைபெற்றது.

மகாசக்தி நாவற்காடு பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள் P.சுபாஜினி மற்றும் ஜஸ்மிலா அவர்களின் தலைமையிலும் பெற்றோர்களின் பங்களிப்புடனும் இடம்பெற்ற நிகழ்வில் அதிதிகளாக மகாசக்தியின் தலைவி P.மங்கையகரசி, மகாசக்தியின் முகாமையாளரும் செயலாளரும் S.திலகராஜன், மகாசக்தியின் இயக்குனர் சபை உறுப்பினரான V.பிரகலாதேவி, சங்கத்தின் முகாமைத்துவ உதவியாளர் K.பிரியாணி மற்றும் மகாசக்தியின் ஆசிரியர்கள் கருணையம்மா, ரணுஜா ஆகியவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் மேலும் பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வில் பாலர் பாடசாலையின் புதிய மாணவர்கள் மாலை அணிவித்து மற்றும் அவர்களுக்கான பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டு மகிழ்வுடன் வரவேற்கும் நிகழ்வும் மேலும் பொங்கல் நிகழ்வும் சிறப்பானதாக இடம்பெற்று இருந்தது.

குறித்த மாணவர்களுக்கான பரிசுப்பொருட்களுக்கு இலங்கை வங்கி அனுசரணை வழங்கியிருந்தது. மேலும் இதற்கு காரணமாக இருந்த அக்கரைப்பற்று, இலங்கை வங்கியின் முகாமையாளர் பிரபாகரன் அவர்களுக்கு மகாசக்தி நாவற்காடு பாலர் பாடசாலை சமூகம் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறார்கள்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker