ஆலையடிவேம்பு

அக்கரைப்பற்று அன்புக்கரங்கள் அமைப்பின் நிவாரணப்பணி இன்றும்…

வி.சுகிர்தகுமார்

அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் தொடர்ந்தும் நிவாரணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைவாக  அம்பாரை மாவட்ட அக்கரைப்பற்று அன்புக்கரங்கள் அமைப்பு  மேற்கொண்ட நிவாரணப்பணி அக்கரைப்பற்று 8/3 மற்றும் 8/2  பிரிவுகளில் இன்று இடம்பெற்றது.

அன்புக்கரங்கள் அமைப்பின் நிருவாகத்தினரால் முன்னெடுக்கப்பட்ட நிவாரணப்பணியில் கிராம உத்தியோகத்தர்களான க.லோகநாதன் மற்றும் என்.மதுஜா  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிவாரணப்பொதியினை வழங்கி வைத்தனர்.

கொரோனா அச்சுறுத்தல் ஆரம்பமான காலம் முதல் இன்றுவரை பல்வேறு நிவாரணப்பணிகளை சிறப்பாக முன்னெடுத்துவரும் அன்புக்கரங்கள் அமைப்பு எதிர்வரும் நாட்களிலும் இப்பணியை முன்னெடுக்கவுள்ளதுடன் இது தவிர பசுமைத்திட்டம் மற்றும் கல்வி கலாசாரம் வாழ்வாதார அபிவிருத்தி போன்ற பல்வேறு செயற்பாடுகளையும் முன்னெடுக்கவுள்ளமை குறப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker