இலங்கை

நாட்டில் மேலும் ஆறுபேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் ஆறு பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்படி, கொழும்பு-14 பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவரும், கொழும்பு-15 பகுதியைச் சேர்ந்த 77 வயதுடைய ஆண் ஒருவரும், கொழும்பு-10 பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய ஆண் ஒருவரும் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளனர்.

அத்துடன், வீரகுல பிரசேத்தைச் சேர்ந்த 68 வயதுடைய ஆணொருவரும், கிரிவத்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 88 வயதுடைய பெண்ணொருவரும் மற்றும் பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்த 83 வயதுடைய பெண்ணொருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 171ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker