கவிதைக்களம்

பெண்ணே நீ எத்தனை அழகு..!

 

வானவிலும் வளையும் உன் அழகான பார்வையில்..
வெண்ணிலாவும் நாணப்படும் உன் அழகான சிரிப்பினில்…
நட்சத்திரங்களும் கண் சிமிட்டும் உன் அழகான நடையில்…
ஆகா!
எத்தனை அழகு..!


அனைத்து இதயங்களும் கொள்ளையடிக்கும் உன் கண்கள் அழகு..
ராமனின் வளைத்த வில்லென உன் புருவம் அழகு..
நற்மணம் வீசும் உன் கூந்தல் அழகு..
நன்னடையாக நடக்கும் உன் நடை அழகு..
பூத்து குலுங்கும் உன் சிரிப்பு அழகு..
இசை கருவிகள் அனைத்தும் தோற்றுப்போகும் உன் கொழுசு அழகு..
எத்தனை அழகு!
உன் அழகை கண்டால்,
குழந்தைகள் கூட கம்பன் ஆவார்கள்
உன் அழகை வர்ணிக்க…
அழகு!
அழகு!
என்னவளே நீ மட்டும் தான் அழகு!!!!..

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker