பெண்ணின் தங்க சங்கிலியை அறுத்து தப்பி ஒடிய சந்தேக நபர் கைது

ஹட்டன் நகருக்கு வருகை தந்த பெண் ஒருவர் ஹட்டன் மென்டிஸ் மாவத்தை ஊடாக சென்று கொண்டிருந்த வேளையில் குறித்த பெண்ணின் தங்க சங்கிலியை அறுத்து தப்பி ஒடிய சந்தேக நபர் ஒருவரை ஹட்டன் பொலிஸார் இன்று (05) கைது செய்துள்ளனர்.
குறித்த பெண் கடந்த 2 ஆம் திகதி ஹட்டன் நகருக்கு வந்து மீண்டும் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த வேளையில் பெண்ணின் தங்க சங்கிலியை அறுத்து தப்பி ஒடியமை தொடர்பில் குறித்த பெண் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றினை பதிவு செய்த நிலையில், குறித்த பெண் டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டார்.
அதனை தொடர்ந்து இன்றைய தினம் ஹட்டன் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மஸ்கெலியா காட்மோர் பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.