இலங்கை

புத்தாண்டு நெருங்கும் வேளை இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சிகர செய்தி

தமிழ் சிங்கள புத்தாண்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் பிறக்கவுள்ள நிலையில் இலங்கையில் சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு ஏற்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தை வட்டாரங்களின் தகவலின்படி இந்த மாத இறுதிக்குள் நாடு முழுவதும் மக்கள் கடுமையான எரிவாயு பற்றாக்குறையை சந்திக்க நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 2019 இல் 440 அமெரிக்க டொலராக இருந்த எரிவாயுவின் விலை பெப்ரவரி மாத இறுதியில் உலக சந்தையில் 604 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.

எனவே 12.5 கிலோ எரிவாயுவுக்கு 770 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரு சிலிண்டரின் தற்போதைய விலை ரூ .1,493 ஆகும். எனினும் இதை 2,148 ஆக உயர்த்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எரிவாயு நிறுவனங்கள் கோரியதற்கு அரசாங்கம் சரியாக பதிலளிக்கவில்லை என்றும் விலை அதிகரிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker