ஆலையடிவேம்பு

“சத்தியம் “ வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பினால் சின்னப் பனங்காடு மகாசக்தி அறநெறிப் பாடசாலை சிறுவர் பூங்கா மறுசீரமைக்கப்பட்டு அங்குராப்பண நிகழ்வு…

ஆலையடிவேம்பு பிரதேச சின்னப் பனங்காடு மகாசக்தி கிராம எழுச்சி அறநெறிப் பாடசாலை மாணவர்களின் வேண்டுதலுக்கு அமைய “சத்தியம் “ வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பினால் சின்னப் பனங்காடு மகாசக்தி கிராம எழுச்சி அறநெறிப் பாடசாலை சிறுவர் பூங்கா முழுவதுமாக புதுப்பொலிவுடன் மறுசீரமைக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டுக்காக வழங்கும் அங்குராப்பண நிகழ்வு இன்று (25.11.2022) வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது.

இந்த சிறுவர் பூங்கா மறுசீரமைப்பிற்கு சத்தியமூர்த்தி “சத்தியம் “ வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பின் ஸ்தாபகர் அவர்கள் காரணமாக இருப்பதுடன் இவரின் தொடர் சேவைகளுக்கு நன்றிகளை மகாசக்தி கிராம எழுச்சி அறநெறிப் பாடசாலை சமூகம் தெரிவித்துக்கொள்கின்றது.

மேலும் குறித்த நிகழ்வு “சத்தியம் “ வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பின் பிரதிநிதி மற்றும் பிரதேச RDS தலைவர் இ.சுவர்ணராஜ் அவர்கள் தலைமையில் புஸ்பநாதன் அவர்களின் ஆதரவுடனும் இடம்பெற்றது. நிகழ்வில் அதிதிகள், மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker