இலங்கை

இந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் ஏற்பாட்டில் கல்முனை நாவிதன்வெளி பெண் தலைமை தாங்கும் 73 குடும்பங்களுக்கான உலர் உணவு பொருட்கள் வழங்கிவைப்பு….

இந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் ஏற்பாட்டில் சேவா இன்டர்நேஷனல் பவுண்டேசன் அமைப்பின் அனுசரணையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை, நாவிதன்வெளி பிரதேச
செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் வாழும் பெண் தலைமை தாங்கும் 73 குடும்பங்களுக்கான உலர் உணவு பொருட்கள் நற்பிட்டிமுனை சுமங்களி மண்டபத்தில் இந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் கல்முனை பிரதேச பொறுப்பாளர். திரு.j. R. தர்மராஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இன் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர் A.அமலதாசன் அவர்கள் பிரதம அதிகயாக கலந்து கொண்டார். சிறப்பு அதிதியாக சமாதான நிதவான் எஸ். சண்முகநாதன், நற்பிட்டிமுனை பல நோக்கு கூட்டுரவு சங்க தலைவர் சிறிவேல்ராஜா, இரா.குணசிங்கம், நற்பிட்டிமுனை சமய செயற்பாட்டாளர் வி.சிசுபாலன் ஆகியோர் சிறப்பு அதிதியாக கலந்து சிறப்பித்தார்கள்.

மேலும் நற்பிட்டிமுனை அறநெறிப்பாடசாலை அதிபர் திருமதி. மோகன் ஜெனிதா, நற்பட்டிமுனை வர்ண கடை உரிமையாளர் ப.கேமதர்சன், இந்து இளைஞர் மன்ற உறுப்பினர் அஸ்நீதன், அவர்களும், இந்து ஸ்சுயம் சேவக சங்க அம்பாரை மாவட்ட செயலாளர் வரதராஜன் , சுயம் சேவக உறுப்பினர்களான துலக்சன், காந்தன், உறுப்பினர்கள் துசாந் ஆகியோர் கலந்துகொண்டு வருகை தந்த 73 பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker