இலங்கை

மஹர சிறைக்கைதிகள் உயிரிழந்தமைக்கான காரணம் வௌியானது

மஹர சிறைச்சாலையில் மோதலில் உயிரிழந்த கைதிகள் 11 பேரும் அங்கு இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தின் ஊடாகவே உயிரிழந்துள்ளமை இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வழக்கு இன்று மீண்டும் வத்தள நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட குழு நீதிமன்றத்திடம் சமர்பித்த அறிக்கையில் மோதிலில் உயிரிழந்த 11 கைதிகளும் துப்பாக்கி பிரயோகத்தினால் ஏற்பட்ட படுகாயங்களினாலேயே உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் 8 பேரின் பிரேத அறிக்கை சமர்பிக்கப்பட்டிருந்துடன் இன்று ஏனைய மூவரின் பிரேத அறிக்கைகளும் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டிருந்தது.

குறித்த மூவருக்கும் கொரோனா தொற்று இல்லாத காரணத்தினால் அவர்களின் சடலங்களை அரச செலவில் அடக்கம் செய்யுமாறு வத்தள நீதவான் புத்திக ஶ்ரீ ராகல சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

இதன்போது சட்டமா அதிபர் சார்ப்பில் நீதிமன்றில் ஆஜரான அரச சட்டத்தரணி நிஷார ஜயரத்ன, குறித்த மோதலில் மஹர சிறைச்சாலையில் ஆறரை கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களுக்கு சோதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker