இலங்கை

பாடசாலை மாணவர்களிடையே அதிகமாகப் பரவும் கொரோனா – PHI எச்சரிக்கை!

கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைளை மீண்டும் திறந்த பின்னர் மாணவர்களிடையே அதிகமாக கொரோனா பரவி வருவதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் (PHI) சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அந்த தொழிற்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன, பல மாணவர்கள், குறிப்பாக ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஊழியர்கள் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளனர் என தெரிவித்தார்.

பல மாவட்டங்கள் உட்பட தென், மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் உள்ள பெரும்பாலான பாடசாலைகளில் பல கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சமூகத்தில் பல நேர்மறையான வழக்குகள் உள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் தாங்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறியவில்லையென்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் இதுபோன்ற குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் பாடசாலைக்குச் சென்ற பின்னர் மற்ற குழந்தைகளுக்கு வைரஸ் பரவக்கூடும் என்று அவர் கூறினார்.

எனவே, பெற்றோர்களும் ஆசிரியர்களும் தமது பிள்ளைகளை எப்போதும் முகமூடி அணியுமாறும், கைகளை அடிக்கடி கழுவி அல்லது சுத்தப்படுத்துமாறும் அறிவுறுத்த வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker