இலங்கை

கொரோனா தொற்று உறுதியானோரின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 45 ஆயிரத்து 466 ஆக அதிகரித்துள்ளது. கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) மேலும் 224பேருக்கு தொற்று உறுதியானதை அடுத்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இலங்கையில் மேலும் 445 பேர் குணமடைந்துள்ள நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 38 ஆயிரத்து 262 ஆக காணப்படுகின்றது.

தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 6 ஆயிரத்து 989 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 613 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

மேலும் இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 215 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker