காலநிலை மாற்றத்திற்கு எதிரான போருக்கு நிதியளிக்க கார் வரிகளை அதிகரிக்க வேண்டும்!

காலநிலை மாற்றத்திற்கு எதிரான போருக்கு நிதியளிக்க கார் வரிகளை அதிகரிக்க வேண்டும் என்று அரசாங்க ஆலோசகர்கள் கூறுகின்றனர்.
சமீபத்திய வழக்கமான வாகனங்களின் மொத்த விற்பனையை 2035 முதல் 2032 வரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான திகதியை அமைச்சர்கள் முன்வைக்க வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
வீட்டு வெப்பமயமாக்கலுக்கான எரிவாயு மீதான வரியை அதிகரிப்பதை திறைசேரியின் தலைவர் (chancellor) பரிசீலிக்க வேண்டும் என்று காலநிலை மாற்றத்திற்கான குழு (சி.சி.சி) கூறுகிறது.
வேலைகளை உருவாக்குவதன் மூலம் கொவிட்-19 நெருக்கடியிலிருந்து பிரித்தானியா மீண்டு வருவதால் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று அது கூறுகிறது.
பசுமை மீட்பின் ஒரு பகுதியாக கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான நோக்கத்தை சி.சி.சி பரிந்துரைக்கிறது.
அமைச்சர்கள் சரியான பொருளாதாரம் சார்ந்த செய்திகளை நுகர்வோருக்கு அனுப்ப வேண்டும் என்றும் குழு வலியுறுத்துகிறது.