இலங்கை
Trending

பட்டியல் உறுப்பினர்கள் பற்றிய விபரங்களை வழங்குமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

( வி.ரி.சகாதேவராஜா)

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டியல் உறுப்பினர்களை பெயரிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

ஏழு நாட்களுக்குள் இந்த பட்டியல் உறுப்பினர்கள் பற்றிய விபரங்களை வழங்குமாறு அறிவித்துள்ளது.

கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் சுயேட்சை குழுக்களின் தலைவர்களுக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டியலில் உறுப்பினர்களை பெயரிடும் போது பெண் உறுப்பினர்கள் தெரிவு தொடர்பில் வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள் கிடைக்கப் பெற்றதும், ஏற்கனவே தேர்தலில் வட்டாரங்களில் வெற்றியீட்டிய வேட்பாளர்களின் பெயர்களுடன் இணைத்து வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதம் 2ம் திகதி உள்ளுராட்சி மன்றங்கள் நிறுவும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker