விளையாட்டு

நாடு திரும்ப முடியாத நிலையில் மஹேல ஜயவர்தன!!

ஐ.பி.எல் போட்டித் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றும் இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் மஹேல ஜயவர்தனவிற்கு நாடு திரும்ப முடியாத நிலை உருவாகியுள்ளது.

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு விமானப் பயணங்கள் முழுமையாக இடை நிறுத்தப்பட்டுள்ளமையினால் அவரால் நாடு திரும்ப முடியாதுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கோவிட் நோய்த் தொற்று பரவுகையினால் இந்தியன் பிரிமியர் லீக் போட்டித் தொடர் காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் மஹேல ஜயவர்தன தற்பொழுது, மாலைதீவிற்கு சென்று தனிமைப்படுத்தப்பட்டு நாடு திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தனிமைப்படுத்தல் காலம் முடிந்த பின்னர் மஹேல இலங்கை திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker