இலங்கை

நாடாளுமன்றத் தேர்தல்: தனியார் நிறுவன ஊழியர்களுக்கான விடுமுறை அறிவிப்பு!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பொது மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பள அல்லது தனிப்பட்ட விடுப்பு இழப்பு இன்றி வாக்களிக்கக்கூடிய வகையில் விடுமுறை வழங்குவது தொடர்பான விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிவிப்பின் அடிப்படையில் தனியார் துறை ஊழியர்கள் சம்பளம் அல்லது தனிப்பட்ட விடுப்பு இழப்பின்றி வாக்களிக்கும் முறை உருவாக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, பணியிடத்திலிருந்து வாக்குச் சாவடிக்கு 40 கிலோ மீட்டர் அல்லது அதற்கும் குறைவான தூரம் இருந்தால் அரை நாள் விடுமுறையும், 40 தொடக்கம் 100 கிலோ மீட்டர் வரை தூரம் இருந்தால் குறைந்தபட்சம் ஒரு நாள் விடுமுறையும் வழங்க வேண்டும்.

100 தொடக்கம் 150 கி‍லோ மீற்றர் வரை தூரம் என்றால் ஒன்றரை நாட்கள் விடுமுறையும், 150 கிலோ மீற்றருக்கு மேல் தூரம் என்றால் இரண்டு நாட்களும் விடுமுறை வழங்க வேண்டும்.

எனினும், இதற்காக பணியாளர்கள் உரிய விடுமுறைக் கோரிக்கையை எழுத்துப்பூர்வமாக தொழில் நிறுவன அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.

மேலும் ஒவ்வொரு நிறுவனத்தின் அதிகாரிகளும், சிறப்பு விடுமுறைக்கு விண்ணப்பித்த நபர்கள் மற்றும் விடுப்புக் காலத்தைக் காட்டும் ஆவணத்தைத் தயாரித்து பணியிடத்தில் காட்சிப்படுத்த வேண்டும் என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker