சுவாரசியம்

நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு கிடைக்கும் சிறப்புரிமைகள்!!

இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்திற்கு கடந்த 5 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் 196 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இவ்வாறு மக்களால் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு பல சிறப்புரிமைகள் கிடைக்கும்.

இதனடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 54 ஆயிரத்து 285 ரூபாய் சம்பளம் வழங்கப்படும். பிரதியமைச்சர் ஒருவருக்கு 63 ஆயிரத்து 500 ரூபாவும் ராஜாங்க அமைச்சர் மற்றும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சருக்கு 65 ஆயிரம் ரூபாவும் சம்பளமாக வழங்கப்படும்.

அத்துடன் சபாநாயகருக்கு 68 ஆயிரத்து 500 ரூபாவும் பிரதமருக்கு 71 ஆயிரத்த்து 500 ரூபாவும் சம்பளமாக வழங்கப்படும். இதனை தவிர நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அலுவலக கொடுப்பனவாக ஒரு லட்சம் ரூபாய், போக்குவரத்து கொடுப்பனவாக 10 ஆயிரம் ரூபாய், தொலைபேசி கொடுப்பனவாக 50 ஆயிரம் ரூபாய், அலுவலகம் மற்றும் செல்போன் கொடுப்பனவாக 50 ஆயிரம் ரூபாய்,

அஞ்சல் கொடுப்பாவாக 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், சாரதி மற்றும் விருந்து கொடுப்பனவாக 4 ஆயிரத்து 500 ரூபாய் என்பவற்றுடன் நாடாளுமன்ற கூட்டங்களில் கலந்துக்கொள்வதற்காக நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும்.

நாடாளுமன்ற கூட்டங்கள் நடைபெறாத நாட்களில் தெரிவுக்குழுக் கூட்டங்களில் கலந்துக்கொள்வதற்காக மேலதிகமாக 2 ஆயிரத்து 500 கூடுதலாக வழங்கப்படும்.

இதனிடையே ஆடம்பர வாகனத்தை கொள்வனவு செய்ய சுங்க தீர்வையற்ற அனுமதிப்பத்திரம் வழங்கப்படும். இவர்கள் 30 லட்சம் முதல் 40 லட்சம் ரூபாவுக்கு கொள்வனவு செய்யும் வாகனத்தை இரண்டு கோடியே 590 லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker