பெண் வைத்திரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை கைது

திருகோணமலை – கோமரங்கடவல பகுதியில் உள்ள வைத்தியசாலையின் பெண் வைத்தியரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (22) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் 34 வயது உடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது
கோமரங்கடவல பகுதியில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டு வந்த ஒப்பந்தகாரர்களில் ஒருவர் பெண் வைத்தியர் தங்கியிருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள பழைய மலசல கூடங்களை நிர்மாணிப்பதற்காக அப்பகுதியை காண்பிக்குமாறும், பெண் வைத்தியரிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து பெண் வைத்தியர் ஒப்பந்தகாரருடன் சென்று அப்பகுதியை காண்பிக்கின்ற போது வைத்தியரை பலாத்காரமாக கட்டி அரவணைத்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்முறைப்பாட்டையடுத்து இரண்டு பிள்ளைகளின் தந்தையான 34 வயதுடைய இளைஞரை கைது செய்துள்ளதாகவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நாளைய தினம் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கோமரங்கடவல பொலிஸார் தெரிவித்தனர்.