மழையுடன் கூடிய வானிலை தொடரும்!!! அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு பிரதேச மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்தும் பாதிப்படையும் அபாயம்!!!

-கிஷோர்காந், அபிராஜ்-
நாடு முழுவதும் மழையுடன் கூடிய வானிலை நிலவுகின்றது இதேபோன்று அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசத்திலும் இதேபோன்று மழையுடன் கூடிய வானிலை நிலவுவதால் பரவலாக வெள்ள நீரினால் மூழ்கிய நிலையில் காணப்படுகின்றது மேலும் ஒரு சிலரின் வீடுகளுக்குள் மழை வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்ததால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் மற்றும் மேலும் பல மக்கள் வீடுகளுக்குள் மழை வெள்ளம் போகக்கூடிய அபாய நிலையும் தொடர்ந்தும் காணப்படுகின்றது.
தற்போது வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்த மக்கள் தங்கள் உறவினர் வீடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளார்கள் மற்றும் பொது இடங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் மேலும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதாகவும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.