இலங்கை

நாய் போல குரைப்பதை நிறுத்தவும்: சுமந்திரன் – சுரேன் ராகவனுக்கு இடையில் கருத்து மோதல்!

அரசியல் கைதிகள் பிரச்சினையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரனுக்கும் சுரேன் ராகவனுக்கும் இடையில் இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் சூடான கருத்து மோதல் இடம்பெற்றது.

அரசாங்க உறுப்பினராக இருந்தபோதிலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்த சுரேன் ராகவன் எந்த நடவடிக்ககைகளையும் எடுக்கவில்லையென சுமந்திரன் குற்றம் சாட்டினார்.

அதனைத்தொடர்ந்து, கைதிகள் விடுவிக்கப்படுவதை உறுதி செய்ய சுமந்திரன் எடுத்த நடவடிக்கைகள் குறித்து சுரேன் ராகவன் கேள்வியெழுப்பினார்.

இதனையடுத்து இந்த விடயம் தொடர்பாக இருவருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றதையடுத்து, சுமந்திரன் ஒரு கட்டத்தில் சுரேன் ராகவனை ஒரு நாய் போல குரைப்பதை நிறுத்துமாறுக் கூறினார்.

அதேநேரம், தமிழ் கைதிகளின் விடுதலை விடயத்தில் அரசியல் நாடகம் நடத்த வேண்டாம் என்றும் சுமந்திரன் அரசாங்கத்திடம் கூறினார்.

அத்தோடு கைதிகளை உடனடியாக விடுவிக்குமாறும் அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

2015 மற்றும் 2019 க்கு இடையில் 100 க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளை விடுவிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு முடிந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker