இலங்கை

தெய்வீக சிறுவர் திட்டத்தின் ஊடாக பின்தங்கிய அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான உதவிகள் வழங்கும் திட்டம் – 2021 நாவிதன்வெளி பிரதேசத்தில் இன்று…

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் தெய்வீக சிறுவர் திட்டத்தின் ஊடாக பின்தங்கிய கிராமங்களில் இயங்கும் அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு
கற்றல் செயற்பாட்டினை முன்னெடுக்கும் வகையில் கற்றல் உபகரணம் புத்தகப்பை அப்பியாசகொப்பிகள் வழங்கும் நிகழ்வு (10.12.2021) இன்று வெள்ளிக்கிழமை மாலை 3,00 மணி ஶ்ரீ சித்திவிநாயகர் அறநெறிப்பாடசால, ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலயம், மத்தியமுகாம் – 05 நாவிதன்வெளி பிரதேசத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வின் திருமுன்னிலை அதிதி சிவஶ்ரீ ஜெ.அரவிந்தன் குருக்கள்
ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலயம் அவர்களும் திரு சோ.ரங்கநாதன் பிரதேசசெயலாளர் பிரதேசசெயலகம் நாவிதன்வெளி அவர்களின் தலைமையில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றன.

ஆன்மிக அதிதிகளாக சிவஶ்ரீ திதேவகுமார் குருக்கள் ஶ்ரீ முருகன் ஆலயம் நாவிதன்வெளி − 02, சிவஶ்ரீ த. சுதந்திரன் குருக்கள் ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலயம் நாவிதன்வெளி – 01, சிவஶ்ரீ ச.சிவாதரக்குருக்கள் ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் அன்னமலை – 01, சிவஶ்ரீ கு.சுபாஷ்கர் சர்மா ஶ்ரீ முருகன் ஆலயம் மத்தியமுகாம் −03 அவர்களும்.

பிரதம அதிதியாக திரு வே.ஜெகதீசன் மேலதிக அரசாங்க அதிபர் மாவட்டச்செயலகம் அம்பாறை அவர்களும்.

சிறப்பு அதிதிகளாக திரு பே.பிரணவரூபன் உதவிப்பிரதேச செயலாளர் நாவிதன்வெளி திரு வே.வாமதேவன் (செயலாளர்) சிவனருள் பவுண்டேசன் அம்பாரை, விசேட அதிதிகள் திரு.ஆ.சிவானந்தம் தலைவர் ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் திரு.ஜெயசுந்தரம் பொறுப்பாசிரியர் ஶ்ரீ சித்தி விநாயகர் அறநெறிப்பாடசாலை ஆகியவர்களின் பங்குபற்றலுடன் சிறந்த முறையில் இடம்பெற்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker